திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 636ஆக இருந்தது. இன்று புதிதாக 36 பேருக்கு நோய் தொற்று உறுதியானதால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 672ஆக உயர்ந்துள்ளது.
நேற்று வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 413ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாகவும் இருந்தது.
மூன்று மாத குழந்தை, 10 பெண்கள், சென்னையிலிருந்து வந்த 10 பேர், விழுப்புரம், திருக்கோயிலூர், காஞ்சிபுரத்திலிருந்து வந்த தலா ஒருவர், மும்பையிலிருந்து வந்த நான்கு பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த ஒன்பது பேர் உள்ளிட்ட 36 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.