தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யார்கோள் அணைக்கு எதிர்ப்பு: விவசாயிகள் நூதனப் போராட்டம் - tn farmers protest against Yergol dam

யார்கோள் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் நூதன போராட்டம்
Yergol dam

By

Published : Jul 28, 2021, 1:44 PM IST

திருவண்ணாமலை: கர்நாடக மாநிலத்தில் உள்ள மார்க்கண்டேய நதியின் குறுக்கே, யார்கேள் அணையை அம்மாநில அரசு கட்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யார்கோள் அணையால், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேகதாது அணையைக் கட்டக் கூடாது என வலியுறுத்தியும் போராட்டம் நடந்தது.

விவசாயிகள் நூதனப் போராட்டம்

கர்நாடக அரசு தமிழ்நாட்டு விவசாயிகள் காதுகளில் பூ சுற்றுவதாகவும், தமிழ்நாடு அரசு 2020ஆம் ஆண்டு உறங்கிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்த விவசாயிகள், எடியூரப்பா போல ஒரு விவசாயியை உருவகப்படுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயி பேட்டி

இதையும் படிங்க: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details