தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தி.மலையில் இன்று 115 பேருக்கு கோவிட் - 19 பாதிப்பு உறுதி! - tn covid 19 news

திருவண்ணாமலை: இன்று ஒரே நாளில் மட்டும் 115 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு ஆயிரத்து 912 ஆக உயர்ந்துள்ளது.

hospital
hospital

By

Published : Aug 18, 2020, 10:19 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு ஆயிரத்து 797 ஆக இருந்தது.

இந்நிலையில், இன்று (ஆக.18) புதிதாக 115 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு ஆயிரத்து 912 ஆக உயர்ந்துள்ளது.

கிருமிநாசினி தெளிப்பு
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஏழு ஆயிரத்து 427 ஆக உள்ளது, சிகிச்சைப் பலனின்றி 127 பேர் உயிரிழந்துள்ளனர்.
தூய்மை பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங்
சென்னை, காஞ்சிபுரம், ஆந்திராவிலிருந்து வந்த தலா ஒருவர், பெங்களூருவில் இருந்து வந்த மூன்று பேர், வேலூரில் இருந்து வந்த நான்கு பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 30 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 29 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற இரண்டு பேர், முன் களப்பணியாளர் ஐந்து பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 39 பேர் உள்ளிட்ட 115 பேருக்கு இன்று மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிளீச்சீங் பவுடர் தெளிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிழக்கு ஆரணி, நாவல்பாக்கம், ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம், ஆக்கூர், வந்தவாசி, பெருங்கட்டூர், போளூர், காட்டாம்பூண்டி, தச்சூர், செங்கம், சேத்பட், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட சுகாதார வட்டத்தைச் சேர்ந்த 115 பேருக்கு இன்று நோய்தொற்று பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை மருத்துவமனை உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details