திருவண்ணாமலை மாவட்டம், தர்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சைமணி (46). இவர் தூசி அருகேயுள்ள புதுப்பாளையம் கூட்டுச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி அவரிடமிருந்து இருசக்கர வாகனம், 500 ரூபாய் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
பின்னர் இது குறித்து அவர் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பச்சைமணியிடம் இருந்து வழிப்பறிச் செய்ததையும், வழிப்பறிச் செய்வதை தொழிலாக வைத்திருப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் ஒரு ஆட்டோ உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.