தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் தொடர்ந்து இரட்டை சதம்; 222 பேருக்குப் புதிதாக கரோனா!

திருவண்ணாமலை: கரோனா பாதிப்பு நேற்று (ஆகஸ்ட் 9) 222 பேருக்குப் புதிதாக ஏற்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்த நோய்த்தொற்று 7ஆயிரத்து 832ஆக உயர்ந்துள்ளது.

By

Published : Aug 10, 2020, 12:51 AM IST

hospital
hospital

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 8) வரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 610ஆக இருந்தது. மேலும் இன்று (ஆகஸ்ட் 9) புதிதாக 222 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானதால், மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 832ஆக உயர்ந்துள்ளது.

மருந்து புகை
நேற்று முன் தினம் வரை, கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 806 ஆக உள்ளது. சிகிச்சைப் பலனின்றி 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாலையில் வீடுகளில் கிருமிநாசினி தெளிப்பு
காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, பெங்களூரில் இருந்து வந்த தலா ஒருவர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 88 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 66 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 38 பேர், முன் களப்பணியாளர்கள் 6 பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 21 பேர் உள்ளிட்ட 222 பேருக்கு நேற்று (ஆகஸ்ட் 9) மட்டும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெருக்களில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு
மாவட்டத்தில் உள்ள கிழக்கு ஆரணி, நாவல்பாக்கம், ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம், ஆக்கூர், வந்தவாசி, பெருங்கட்டூர், போளூர், காட்டாம்பூண்டி, தச்சூர், செங்கம், சேத்பட், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட சுகாதார வட்டத்தைச் சேர்ந்த 222 பேருக்கு நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை மருத்துவமனையிலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வீடுகளில் கிருமிநாசினி தெளிப்பு
கடந்த சில நாட்களாக தொடர்ந்து புறநோயாளிகள் பிரிவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக நோயாளிகளிடம் தொடர்பில் இருந்தவர்களிடம் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு, அது மற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட பாதிப்பாக தொடர்ந்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details