தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கந்தசஷ்டி விழா - விண்ணைப் பிளந்த பக்தர்களின் 'அரோகரா' முழக்கம் - திருவண்ணாமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி

திருவண்ணாமலை: பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற மஹா கந்தசஷ்டி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

devasena_marriage

By

Published : Nov 4, 2019, 10:14 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மஹா கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது. மஹா கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி நவம்பர் 6ஆம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

ஏழாம் நாளான நேற்று பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வளாகத்தில் தேவேந்திரனை காத்த முருகப்பெருமானுக்கு தேவேந்திரனின் மகளான தேவசேனாவுடன் திருமணம் நடைபெறும் சுபநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருமணத்தை கண்டு களித்து முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று விண்ணைப் பிளக்க பக்தி பரவசத்துடன் கூறி அருள் பெற்றனர்.

தேவசேனா திருமணத்திற்கு வந்த பெண்கள் அனைவருக்கும் திருமாங்கல்யமும், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

பாலசுப்பிரமணியசுவாமி கோயிலின் மஹா கந்தசஷ்டி திருவிழா!

மேலும் படிக்க: கோயில் நிலங்களை ஏழைகளுக்கு வழங்க பரிசீலனை - உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details