தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் - Aani Brahmotsavam

உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 64 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தங்க கொடிமரத்தில் கொடியேற்றம்....
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தங்க கொடிமரத்தில் கொடியேற்றம்....

By

Published : Jul 8, 2022, 11:00 AM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பத்து நாள்கள் நடைபெறும் இந்த ஆனி பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாள் காலை மற்றும் மாலையில் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும்.

சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான ஆடிமாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி பிரம்மோற்சவம் காலை 6 மணிக்கு தஷ்ணாயன புண்ணியகால கொடியேற்றம் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெருவதை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து முதலில் விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கொடிமரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

பின்னர் அண்ணாமலையார் கருவறை முன்பாக இருந்த 64 அடி தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் வழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திருளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:கடலூரில் தனியார் பேருந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details