திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தில் சாராயம் விற்பதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கலால் டிஎஸ்பி பழனி தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர் .
அப்போது, சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வைதீஸ்வரி (27), சரிதா (34), தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (48) ஆகியோர் சாராயம் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.