திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் யோகா ஆசிரியை கல்பனா. இவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா கலையைக் கற்பித்து வருகிறார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு தனது தலைமுடி ஜடையின் மூலம் காரை கயிற்றைக் கொண்டு இணைத்து நீண்ட 400 மீட்டர் தூரம் இழுத்தார்.
திருவண்ணாமலை துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.