திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கலசபாக்கம், ஜமுனாமுத்தூர் ஆகிய வட்டங்களில் தமிழ்நாடு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் 6 ஆயிரத்து 395 பயனாளிகளுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் மைதிலி, உள்ளிட்ட பலர் கொண்டனர்.