தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிகிச்சைப்பெற்று திரும்பிய பிறவி இருதய நோயாளி; வரவேற்ற தி.மலை ஆட்சியர் - Thiruvannamalai collector receive heart patient

திருவண்ணாமலை: காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெற்று திரும்பிய பிறவி இருதய நோயாளியான பழங்குடியின சிறுவன் கோவிந்த ராஜை மாவட்ட ஆட்சியர் வரவேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Thiruvannamalai collector welcomes congenital heart patient who received treatment

By

Published : Oct 7, 2019, 10:19 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் தண்டம்பட்டு கிராமம் இருளர் இனத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (16). இவர் பிறவி இருதய நோயினால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், குடும்ப வறுமை காரணமாக கோவிந்த ராஜ் குடும்பத்தினர் கடந்த திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மேல் சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

இதையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெற சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையை பரிந்துரை செய்தார். சிகிச்சைகள் முடிவடைந்த நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்த எண்ணிய கோவிந்தராஜ் குடும்பத்தினர் நேற்று மாவட்ட ஆட்சியர் முகாமிற்குச் சென்றனர்.

அவர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் அரசின் நிவாரண நிதிகள், பழங்கள், புத்தாடைகள் வழங்கிவரவேற்றார்.

இதையும் படிங்க: தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்: பயனடைந்த 600 பேர்!

ABOUT THE AUTHOR

...view details