தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 3, 2021, 1:35 PM IST

Updated : Feb 3, 2021, 2:20 PM IST

ETV Bharat / state

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட திருவண்ணாமலை ஆட்சியர்!

திருவண்ணாமலை: பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

கரோனா தடுப்பூசி போடும் அட்சியர் சந்தீப் நந்தூரி
கரோனா தடுப்பூசி போடும் அட்சியர் சந்தீப் நந்தூரி

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று (பிப். 3) கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி16ஆம் தேதிமுதல் நடைபெற்றுவருகிறது. இதில், முதல்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கரோனா தடுப்பூசி போடும் அட்சியர் சந்தீப் நந்தூரி

இத்தகைய தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: திருச்சி காவேரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி மையம் திறப்பு

Last Updated : Feb 3, 2021, 2:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details