தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆழ்துளைக் கிணறுகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு - borewells in thiruvannamalai

திருவண்ணாமலை: பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆழ்துளைக் கிணறுகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

By

Published : Oct 30, 2019, 8:29 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் சிறுவள்ளூர் பகுதியில் மூன்று வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளைக் கிணறு இன்றுவரை மூடப்படாமல் இருக்கிறது.

குழந்தை சுஜித்தின் மரணத்திற்குப் பின் ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சிறுவள்ளூர் பகுதியில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாகவே பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றியிருந்தது. ஆனால் மக்களும் சரி ஆட்சியாளர்களும் சரி அதனை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்த அனைத்து அலுவலர்களும் முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மக்களிடம் எதிர்பாப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க:

சல்மான்கானுக்குப் பிடித்த விஜய் படம் இதுவா?

ABOUT THE AUTHOR

...view details