திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பரமனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சிவராசு, இவரது மனைவி காமாட்சி ஆவார். இருவருக்கும் சொந்தமான மூன்று சென்ட் நிலத்தை தனது அக்கா, தங்கை ஆகியோர் பெயரில் எழுதிக் கொடுப்பதற்கு சிவராசு திட்டமிட்டுள்ளார்.
இதனை முன்னதாகவே தெரிந்துகொண்ட காமாட்சி தனது மகள் பெயரில் அந்த மூன்று சென்ட் இடத்தை பத்திரப்பதிவு செய்ய செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த சிவராசு மற்றும் அவரது அக்கா, தங்கை ஆகிய மூவரும் ஒன்றினைந்து காமாட்சியை தாக்க முயன்றுள்ளனர். அப்போது தன்னை அடிக்க முற்பட்டால் தனது கழுத்தை அறுத்துக் கொள்வதாக அவர் மிரட்டியுள்ளார்.