திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் 'ஆரோக்கியம்' திட்டத்தை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடக்கி வைத்தார். அதில் அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்குச் சித்த மருத்துவம் சார்பாக கபசுரக் குடிநீர் சூரணம், ஆயுர்வேத மருத்துவம் சார்பாக இந்து காந்த கஷாயம், ஹோமியோபதி மருத்துவம் சார்பாக ஆர்சனிகம் ஆல்பம் மாத்திரைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கஸ்தூரி, சித்த மருத்துவர்கள் கார்த்திகேயன், துரைவிநாயகம், ஆயுர்வேத மருத்துவர் புனிதவதி, ஹோமியோபதி மருத்துவர் ராதிகா, யோகா மருத்துவர் விஜய் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.