திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியம் சீட்டம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் காவல்காரன் என்பவர் போட்டியிட்டார். ஜனவரி 2ஆம் தேதி வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதில், காவல்காரன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் 631 வாக்குகளும் எதிரணியினர் 632 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காவல்காரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வாக்கு எண்ணும் அலுவலர் ஆட்டோ சின்னத்தில் விழுந்த இரண்டு வாக்குச்சீட்டில் மை இருந்தபோதிலும் எதிர்த்தரப்பினர் கூச்சல் குழப்பம் போட்டு அலுவலர்களை மிரட்டி அந்த வாக்குச்சீட்டுகளை செல்லாத வாக்குகளாக அறிவிக்கக் கோரி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.