திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள சாமந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரை அடையாளம் தெரியாத நபர்கள் தென் மாதிமங்கலம் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் நெல் அறுவடை இயந்திரத்தில் தொங்கியபடி அடித்து கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கடாலடி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.