திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு கிடைத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை கிராமிய உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சித்ரா தலைமையில் தண்டராம்பட்டு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல் துறையினர் இணைந்து பீமாரப்பட்டி, மேல்திருவடத்தனூர் ஆகிய பகுதிகளில் நடத்திய சோதனையில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 260 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை வைத்திருந்த ஆனந்தன், ராஜீவ் காந்தி, கோபி, செல்வராஜ், கண்ணன், ஏழுமலை, ராமர், கோவிந்தன் ஆகிய எட்டு பேரும் தானிப்பாடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் செங்கம் வட்டம் உச்சிமலை குப்பத்தில் செங்கம் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சின்ராஜ் தலைமையில் மேல்செங்கம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உச்சிமலை குப்பம் பகுதியில் நடத்திய சோதனையில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த ராஜா, ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.