திருவண்ணாமலை நகரின் பச்சையம்மன் கோயில் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதி நெருப்பு மலை அடிவாரத்தில் புள்ளிமான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கோடை வெயிலால் வனப்பகுதியில் நீர் ஆதாரம் ஏதும் இல்லாததால், தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வனவிலங்குகள் வருகின்றன.
இவ்வாறு குடிநீர் தேடி பச்சையம்மன் கோயில் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த புள்ளி மான் ஒன்று, தெரு நாய்களால் கடித்து குதறி உடல் சிதறிய நிலையில் உயிரிழந்தது. மேலும், இந்த பெரிய புள்ளி மான் குடிநீர் தேடி வந்து வேலிகளில் சிக்கி நாய்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் பல நாய்கள் கடித்ததால் உடல் சிதறி உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களை வேதனையடைச் செய்துள்ளது.