தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவில் இருந்து மக்களைக் காக்க சிறப்பு யாகம்...! - கரோனாவில் இருந்து மக்களைக் காக்க சிறப்பு யாகம்

திருவண்ணாமலை: ஸ்ரீ கோபால விநாயகர் திருக்கோயிலில் கரோனா வைரஸிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

special-sacrifice-to-protect-the-people-from-the-corona
special-sacrifice-to-protect-the-people-from-the-corona

By

Published : Apr 10, 2020, 7:25 AM IST

திருவண்ணாமலை கோபால பிள்ளையார் கோவில் தெருவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருக்கோயில் ஸ்ரீ கோபால விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு கோபால விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

ஸ்ரீ கோபால விநாயகர் திருக்கோயில்

அதனைத்தொடர்ந்து, தற்பொழுது உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸிலிருந்து பொது மக்களை காக்க சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தில் பஞ்சகவ்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பாலபிஷேகம், ஸ்நபன அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.

மக்களைக் காக்க சிறப்பு யாகம்

முன்னதாக இக்கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து பல்வேறு மூலிகைப் பொருள்களைக் கொண்டு உலக நன்மைக்காகவும், கொடிய நோயான கரோனா வைரஸிலிருந்து பொது மக்களை பாதுகாக்கவும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தினர்.

இதையும் படிங்க:வெள்ளிக்கிழமை முதல் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனை - மாவட்ட ஆட்சியர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details