தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 14, 2021, 7:36 AM IST

ETV Bharat / state

‘திருவண்ணாமலையில் மஞ்சு விரட்டுக்குத் தடை’- எஸ்பி அரவிந்த்!

திருவண்ணாமலை: இந்தாண்டு நடைபெறும் மஞ்சுவிரட்டு, எருது விடுதல் உள்ளிட்ட விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் மஞ்சு விரட்டுக்குத் தடை
திருவண்ணாமலையில் மஞ்சு விரட்டுக்குத் தடை

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் நேற்று (ஜன.13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் திருநாளையொட்டி கலசப்பாக்கம் தொகுதியிலுள்ள கீழ்பாலூர், மேல்சிறுவள்ளுர், மேல்சோழங்குப்பம், ஆதமங்களம் புதூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் மஞ்சுவிரட்டு, காளை விடும் திருவிழா நடைபெறும்.

தற்போது கரோனா பரவலின் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தடை நீடிக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா ஆகிய விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சாத்தனூர் அணை ஜவ்வாதுமலை, செண்பகத்தோப்பு அணை ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா கடத்தல், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபட்ட 138 நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 119 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 224 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் 206 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 1 கோடிய 15 லட்சத்து 42 ஆயிரத்து 761 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு 297 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் 167 இடங்களில் புதியதாக கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆயிரத்து 32 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாட்டரி சீட்டு விற்ற 165 நபர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்ட 170 நபர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

முன்னதாக எஸ்பி அரவிந்த் தலைமையில், அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் ஏடிஎஸ்பி அசோக்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ’கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் அமைப்பு குற்றங்களைக் குறைக்கும்’

ABOUT THE AUTHOR

...view details