திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த திரேசாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மனைவி மேரி (60), பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வினோத் (38), சதீஷ் (36) என்ற 2 மகன்கள் உள்ளனர் . இவரது மகன் வினோத் திண்டிவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு மேரிக்கு சொந்தமான வீட்டு மனையை சதீஷின் மனைவி ரேவதி பெயருக்கு எழுதிவைத்ததாக கூறப்படுகிறது. இது கடந்த வாரம் வினோத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து வினோத் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று சரிபார்த்துள்ளார். அப்போது, தம்பி மனைவியான ரேவதி பெயரில் சொத்து எழுதப்பட்டிருப்பது தெரிந்தது.
இதனால், ஆத்திரமடைந்த வினோத் கடந்த 6 ஆம் தேதி தனது தாய் மேரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கொலைச் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் (பிப். 07) காலை தனியார் பால் கொள் முதல் நிலையத்தில் விற்பனை செய்ய கறந்து வைத்திருந்த பாலில் வினோத் விஷம் கலந்துள்ளார்.