திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கங்கை சூடாமணி கிராமத்தில் செயல்படும் ஓர் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவியை பள்ளியின் தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜ் என்ற அரசு பள்ளி ஆசிரியர் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
குழந்தை வீட்டுக்குச் சென்ற போது அழுவதைக் கண்ட பெற்றோர் உடலை பரிசோதனை செய்தனர். அப்போது உடலில் காயங்கள் காணப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனையில் பாலியல் தொந்தரவுக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.