திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள வலையாம்பட்டு, சென்னசமுத்திரம் பீட் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வம்(37), தினேஷ் (21), காத்தாடி (30). இவர்கள் மூவரும் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் மாட்டு வண்டியை பயன்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, வனசரகர் ராமநாதன் தலைமையில் வனகர்கள் வெங்கட்ராமன், ரேவதி, விவேகானந்தன், வனக்காப்பாளர்கள் செல்வராஜ், மோகன், சி.கே வேலு, செல்லையன், ஜெயவேல் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.