கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சபரிமலை ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு - Minister Sevur Ramachandran Participated
சென்னை: திருவனந்தபுரத்தில் நடந்த சபரிமலை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்துகொண்டார்.
![சபரிமலை ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4977039-thumbnail-3x2-seur.jpg)
Sabarimala meeting
இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து சமய அறநிலையைத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்றார். இந்நிகழ்வில் தென் மாநிலங்களைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நானோ தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட நுழைவுவாயில் தகடுகள் சபரிமலைக்கு அனுப்பிவைப்பு!