திருவண்ணாமலையில் உள்ள ராமஜெயம் நகரில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். ஆனால், இங்கு போதுமான கழிவுநீர் வடிகால் வசதியும், சாலை வசதியும் அமைத்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தித் தருவதாக ஒப்பந்ததாரர் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் மண் சாலையாக இருந்ததை சமப்படுத்தி கழிவுநீர் கால்வாய் அமைக்க ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டியுள்ளனர்.