திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டத்தின்கீழ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் பொதுமக்கள் நலன்கருதி பௌர்ணமி நாளான அக்டோபர் 1ஆம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 01:10 மணிமுதல் அக்டோபர் 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 02:55 மணி வரை கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள், பொதுமக்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே அருணாச்சலேஸ்வரர் மலையைச் சுற்றி கிரிவலம் செல்ல பக்தர்கள், பொதுமக்கள் வருகைபுரிய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார்.