திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 73 அம்மா மினி கிளினிக் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மருத்துவாம்பாடி கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர்.
இந்தக் கிராமத்திற்கு அம்மா மினி கிளினிக் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு நேற்று (பிப். 12) திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதையொட்டி மினி கிளினிக் திறப்புக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு அம்மா மினி கிளினிக் திறக்க இருந்ததால் மருத்துவம்பாடி கிராம மக்கள் நேற்று காலை முதலே காத்திருந்தனர்.