தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 24, 2020, 5:22 PM IST

ETV Bharat / state

கழுத்தறுக்கப்பட்டு விவசாயி கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!

திருவண்ணாமலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த விவசாயி குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கழுத்தறுக்கப்பட்டு விவசாயி கொலை
கழுத்தறுக்கப்பட்டு விவசாயி கொலை

திருவண்ணாமலை: செங்கம் அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த விவசாயியின் கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நடராஜ் (51). இவர் அதே பகுதியில் வேளாண்மை செய்துவருகிறார். இந்நிலையில், நேற்று (செப். 23) மாலை நடராஜுக்குத் தொலைபேசியில் அழைப்பு வந்ததால், தான் சிறிது நேரத்தில் திரும்பிவருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு வெளியே சென்றார்.

இரவு முழுவதும் நடராஜ் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த அவரது மனைவி, இது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இந்நிலையில், இன்று (செப். 24) காலை நடராஜ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடப்பதாக தகவலைக் கேட்ட அவரது மனைவி, உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த செங்கம் காவல் துறையினர், உயிரிழந்த நடராஜ் உடலை மீட்க முயன்றனர். ஆனால், நடராஜின் உறவினர்கள் கொலைசெய்த நபரை உடனே கைதுசெய்யக்கோரி வலியுறுத்தி உடலை எடுக்க மறுப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கும், காவல் துறையினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளுமுள்ளாக மாறியது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கொலைசெய்த குற்றவாளிகளைக் கைதுசெய்வதாக வாக்குறுதியளித்தார்.

இதையடுத்து, நடராஜின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: தொழில் விரோதத்தால் ஒருவர் கொலை : 6 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள்!

ABOUT THE AUTHOR

...view details