தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 6, 2021, 10:55 PM IST

ETV Bharat / state

கள்ள ஓட்டு போட்டதாகக் கூறி பாமக, அதிமுக சாலைமறியல்!

கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்குள்பட்ட சோமாசிபாடி மேடு பகுதி வாக்குச்சாவடியில் திமுக கள்ள ஓட்டுப்போட்டதாகக் கூறி பாமக, அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாமக, அதிமுக சாலைமறியல்
பாமக, அதிமுக சாலைமறியல்

திருவண்ணாமலை: தமிழ்நாடு முழுவதும் இன்று (ஏப்.6) சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்குள்பட்ட சோமாசிபாடி கிராமத்திலுள்ள டேனிஷ் மிஷன் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டுப்போட்டதாகக் கூறி பாமகவினர், அதிமுகவினர் காட்டுகுளம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிவிரைவு படை, காவல்துறையினர் அவர்களை விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து டேனிஷ் மிஷின் உயர்நிலை பள்ளியில் உள்ள மூன்று வாக்குச்சாவடிகளில் கதவுகள் அடைக்கப்பட்டு வாக்காளர்களை சோதனைக்கு பின்னரே காவல்துறை வாக்களிக்க அனுமதித்தனர்.

இதனால் 5 மணிக்கு மேல் யாரும் வாக்களிக்க வராததால் வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. அந்த கிராமத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

இதையும் படிங்க:நல்லாட்சி தொடர வாக்களித்த மக்களுக்கு நன்றி- ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details