தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா நினைவுநாள்: அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சமபந்தி விருந்து - Samabanthi Virundhu organised in arunachalesawara kovil

திருவண்ணாமலை : பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவுநாளை முன்னிட்டு, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று சமபந்தி விருந்து நடைபெற்றது.

anna death anniversary Arunachalesawara kovil sama banthi
anna death anniversary Arunachalesawara kovil sama banthi

By

Published : Feb 4, 2020, 8:59 AM IST

பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவுநாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறை சார்பில், நேற்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பொது விருந்து வழிபாடு நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி. சக்கரவர்த்தி, பக்தர்கள், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொது விருந்தில் கலந்துகொண்டு உணவு உட்கொண்டனர்.

சமபந்தி விருந்து

வெளியூரிலிருந்து அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களும் சமபந்தி பொது விருந்தில் கலந்துகொள்ள காத்திருந்து சாப்பிட்டனர்.

மேலும், பேரறிஞர் அண்ணா நினைவைப் போற்றும்வகையில் பொது விருந்து வழிபாட்டில் கலந்துகொண்ட ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க : அண்ணா நினைவு நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details