தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலை, கரோனா பாதிப்பு 3, 075 ஆக உயர்வு - திருவண்ணாமலை செய்திகள்

திருவண்ணாமலை: மாவட்டத்தில் ஒரே நாளில் மட்டும் 151 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பாளர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

By

Published : Jul 13, 2020, 8:46 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஜூலை11) வரை கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 924 ஆக இருந்தது.

இந்நிலையில் நேற்று (ஜூலை12) புதிதாக 151 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் (ஜூலை 11) வரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக உள்ளது. சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையிலிருந்து வந்த 11 பேர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து வந்த தலா ஒருவர், பெங்களூருவில் இருந்து வந்த இருவர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 19 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 30 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 57 பேர், முன் களப்பணியாளர்கள் ஐந்து பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 25 பேர் உள்ளிட்ட 151 பேருக்கு நேற்று மட்டும் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் மொத்த பாதிப்பாளர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா பேரிடரில் சாலை பணிகளுக்கான டெண்டர் அவசியமா? - கே.எஸ்.அழகிரி

ABOUT THE AUTHOR

...view details