தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 67 வழக்குகளுக்கு தீர்வு

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 67 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டது.

By

Published : Jul 10, 2021, 10:24 PM IST

67 வழக்குகளில்
67 வழக்குகளில்

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 10) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான சி.திருமகள் இதற்கு தலைமை தாங்கினார்.

அதில் வங்கி சார்ந்த வழக்குகள், போக்குவரத்து வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் என மொத்தம் 67 வழக்குகள் ரூ 1.95 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

மேலும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் தங்களது வழக்கறிஞர்களுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details