தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளத்தில் மூழ்கி தாய்-மகள் உயிரிழப்பு! - thiruvannamalai mother daughter dead

திருவண்ணாமலை அருகே குளத்தில் நீராடியதாயும் மகளும், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

குளத்தில் மூழ்கி தாய்-மகள் உயிரிழப்பு
குளத்தில் மூழ்கி தாய்-மகள் உயிரிழப்பு

By

Published : Mar 24, 2021, 9:03 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் ஊராட்சி. பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர், கூலித்தொழிலாளி வடிவேல். இவரது மனைவி சென்னம்மாள் ( 33 ). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இவர்களது மூத்த மகள் மோனிஷா (12), அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில், 7 ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 23) சென்னம்மாள், தனது மகள் மோனிஷாவை அழைத்து கொண்டு அருகிலுள்ள குட்டையில், துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது மோனிஷா குட்டையில் இறங்கி குளித்த போது நீரில் மூழ்கியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சென்னம்மாள், தனது மகளை காப்பாற்ற சென்றபோது, இருவரும் குட்டையில் மூழ்கினர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு ,சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சாத்தனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 6.28 கோடியாக அதிகரித்த வாக்காளர்கள்

ABOUT THE AUTHOR

...view details