தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 21, 2020, 11:56 AM IST

ETV Bharat / state

வேன் ஓட்டுநர்களுக்கு உதவிய அமைச்சர்

திருவண்ணாமலை: ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்து வரும் வேன் ஓட்டுநர்களுக்கு சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

Minister Sevoor Ramachandran Helps Van Drivers in Tiruvannamalai
Minister Sevoor Ramachandran Helps Van Drivers in Tiruvannamalai

நாடு முழுவதும் இன்று 27ஆவது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதனால் பல விளிம்புநிலை மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு தவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வேன் ஓட்டுநர்களுக்கு உதவிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

தற்போது செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் வேன் ஓட்டுநர்கள் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேலையின்றி இருந்து வருவதால், அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் சென்று வழங்கினார்.

இதையும் படிங்க:பொதுமக்களிடையே அதிகரிக்கும் கரோனா அச்சம்! மனிதாபிமானம் இழக்கும் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details