தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 25, 2021, 3:15 PM IST

Updated : Mar 25, 2021, 9:40 PM IST

ETV Bharat / state

எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் தொடரும் சோதனை: ரூ.3.5 கோடி பறிமுதல்!

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலுவுக்குச் சொந்தமான கல்லூரி, கிரானைட் நிறுவனம் உள்ளிட்ட 18 இடங்களில் வருமானவரித் துறையினர் நடத்தி சோதனையில் மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.

IT raid
எ.வ.வேலு

திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் தற்போது திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராகவும் எ.வ. வேலு உள்ளார். இவர் திருவண்ணாமலையில் சொந்தமாக பொறியியல் கல்லூரி, அறக்கட்டளை, நிதி நிறுவனம் நடத்திவருகிறார்.

இந்நிலையில், இன்று (மார்ச் 25) வருமானவரித் துறையினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

திருவண்ணாமலையில் அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் அறிவியல் கல்லூரி, ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளி, சே. கூடலூரில் உள்ள எ.வ. வேலுவின் இல்லம், புதிதாக தற்போது கட்டப்பட்டுவரும் மருத்துவக் கல்லூரி, கிரானைட் நிறுவனம், அவரது உறவினர் வீடுகள் என 18-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்

திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பரப்புரையில் ஈடுபட்டுள்ள நிலையில், அதே தொகுதியின் வேட்பாளருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடப்பது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எ.வ.வேலுக்கு சொந்தமான 18 இடங்களில் ஐடி ரெய்டு

இதேபோல, எ.வ. வேலுவுக்குச் சொந்தமான ஆழ்வார்பேட்டை ஸ்ரீலப்தி காலனியில் உள்ள வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். சோதனையில், தற்போதுவரை மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’மயிலாப்பூரில் மீனவர்களுக்கே முன்னுரிமை’ - தா. வேலு

Last Updated : Mar 25, 2021, 9:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details