தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4,500 பேருக்கு திருமண உதவிகளை வழங்கிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் - thiruvannamalai district news

திருவண்ணாமலை: தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு எட்டு கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

sevur ramachandran gives tamilnadu govt women welfare schemes to thiruvannamalai

By

Published : Oct 3, 2019, 7:07 PM IST

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை சார்பில் 2019-20ஆம் ஆண்டிற்கான திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு எட்டு கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் இன்று நடைபெற்றது. நான்காயிரத்து 500 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருமண உதவிகளை வழங்கிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, செங்கம், புதுப்பாளையம், கலசபாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டாயிரத்து 191 பயனாளிகளுக்கு 6 கோடியே 57 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயமும், பட்டப்படிப்பு முடித்த ஆயிரத்து 139 பயனாளிகளுக்கு 5 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரம் திருமண உதவித்தொகையும், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்த ஆயிரத்து 52 பயனாளிகளுக்கு 2 கோடியே 63 லட்சம் திருமண உதவித்தொகையும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அவருடன் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.64.72 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்

ABOUT THE AUTHOR

...view details