திருவண்ணாமலை அடுத்த தேனி மலையிலுள்ள மலை மற்றும் இயற்கை வளங்களை குடைந்து, சுமார் 50 சென்ட் நிலத்தை போக்குவரத்து துறையில் நடத்துனராக பணியாற்றி வரும் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் ஆக்கிரமித்து விற்பனை செய்துவருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த இடத்தில் பரமேஸ்வரன் கட்டடம் ஒன்றையும் கட்டியுள்ளார், அந்தக் கட்டடத்தை வருவாய் கோட்டாட்சியர் பார்வையிட்டு அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கினர்.
தற்போது மறுபடியும் பரமேஸ்வரன் அந்த இடத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீர்த்துளி இயக்கம் சார்பாக இளைஞர்கள் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட சென்றபோது அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள பரமேஸ்வரன் என்பவர் மரக்கன்றுகள் நட விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.