திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை மலை அருகேயுள்ள மேல்பட்டு பகுதி வன காவலர்கள் ராஜமாணிக்கம், சந்திரன். இவர்கள் நேற்று (ஆக.26) இரவு இருசக்கர வாகனத்தில் கோரையாறு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் மண் சரிவில் திடீரென இவருவம் சிக்கி விபத்துக்குள்ளாகினர். இந்த விபத்தில் ராஜமாணிக்கம், சந்திரன் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைக் கண்ட அவ்வழியாக வந்த சிலர், இருவரையும் மீட்டு முதலில் மேல்பட்டு வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து வன அலுவலர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.