தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை: விவசாய நிலங்களில் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது எனக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

farmers-women-protest
farmers-women-protest

By

Published : Jul 31, 2020, 10:18 AM IST

திருவண்ணாமலையைச் தொழிலதிபரான ஜே.செல்வன் என்பவரின் மருமகள் எஸ். அருணா பெயரில் இடத்தை வாங்கி அவசர அவசரமாக அந்த இடத்தில் கல்குவாரி ஜல்லி மெஷின் மற்றும் ஹாட் ப்ளாண்ட் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலத்தை சுற்றி விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலம், வீடுகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அந்த இடத்திற்கு அருகில் அரசுக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. மேலும் ஆற்காடு லூதரன் திருச்சபை ஏ எல் சி சர்ச்சுக்கு சொந்தமான நிலமும் உள்ளது.

அந்த இடத்தில் ஏற்கனவே உள்ள கல்குவாரியால் சுற்றுப்புற பகுதியில் மாசு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக கல்குவாரி ஜல்லி மிஷன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் மேலும் காற்று மாசு ஏற்படும் வகையில் ஹாட் ப்ளாண்ட், ஜல்லி மிஷின்கள் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தட்டிப் பறிக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதைக் கருத்தில் கொண்டு கல்குவாரி ஜல்லி மெஷின் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்று கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஐங்குணம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தனர்.

மேலும், எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் கல் குவாரி அமைக்க அனுமதி அளித்தால் பொதுமக்கள் அனைவரும் விவசாய நிலங்களில் தற்கொலை செய்துகொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details