தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

20 லட்சம் ரூபாய்க்காக விவசாயியை கிணற்றில் வீசிய கொடூரம்! - farmer murder at Tiruvannamalai

திருவண்ணாமலை: பணத்தகராறில் விவசாயினுடைய கை, கால்களை கட்டி கிணற்றில் உயிருடன் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

By

Published : Jan 23, 2021, 12:24 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் கீழ் கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன்(48), விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த ஜனவரி 20ஆம் தேதி, இரவு நேரத்தில் தனது விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு குபேந்திரன் வரவில்லை. இதையடுத்து, அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளனர். இதுதொடர்பாக வேட்டவலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மாயமான குபேந்திரன் கைப்பேசியிலிருந்து அவரது மூத்த மகன் ராஜேஷ் கண்ணாவின் செல்ஃபோனுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள், உன் தந்தையை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம் அவரை விடுவிக்க 20 லட்சம் ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு வெறையூரில் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு வா எனத் தெரிவித்தனர்.

கடத்தல்காரர்கள் சொன்னதுபோலவே 20 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு வெறையூர் பகுதிக்கு உறவினர்கள் சென்றுள்ளனர். அப்போது, மீண்டும் கடத்தல்காரர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது அங்கிருந்து விழுப்புரத்திற்கு வரச்சொல்லி அழைப்பை துண்டித்துள்ளனர். பணத்துடன் ராஜேஷ் கண்ணா விழுப்புரம் சென்றுள்ளார். அப்போது, பணத்தை வாங்க வந்த முகமூடி அணிந்து வந்த மூன்று பேரை, காவல் துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில், மூவரும் அதே பகுதியில் உள்ள அண்டம்பல்லத்தை சேர்ந்த சீனிவாசன் (31), கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(40), வெண்ணியந்தல் கிராமத்தை சேர்ந்த பாவாடை(28), என்பதும் இவர்களுக்கும் குபேந்திரனக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சமீப காலங்களாக பிரச்னை இருந்தது தெரியவந்தது.

நிலத்தை பார்வையிட சென்ற குபேரனை, மது அருந்த தனியாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அவரிடம் பணம் தொடர்பாக பேச்சை தொடங்கியுள்ளனர். இதனால் குபேந்திரனுக்கும் மற்ற மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மூவரும் குபேந்திரனை அடித்து கை கால்களை கட்டி உயிருடன் கிணற்றில் வீசியதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, குற்றவாளிகள் சொன்ன கிணற்றுக்கு சென்ற தீயணைப்புத் துறையினர், தண்ணீரை வெளியேற்றி ரத்த காயங்களுடன் கை கால்கள் கட்டிய நிலையில் இறந்து கிடந்த குபேந்திரன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கலைக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details