திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் நந்தினி உட்பட 15 மருத்துவர்கள், செவிலியர்கள் என 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஆரணியைச் சுற்றியுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தற்போது மாவட்டளவில் இம்மருத்துவமனையில் நோயாளிகள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவது அதிகமாக உள்ளதாக மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கபட்டது. இந்நிலையில், திடீரென மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் விஸ்வநாதன் நேரில் வந்து தீடீர் ஆய்வு செய்தார்.