தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு: அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அழுகும் தர்பூசணி - The impact of the watermelon business

திருவண்ணாமலை: 144 தடை உத்தரவால் தர்பூசணி அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அழுகிய நிலையில் இருப்பதாகா விவசாயிகள் வேதனைடைந்துள்ளனர்.

அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அழுகிய நிலையில் காணப்படும் தர்பூசணி
அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அழுகிய நிலையில் காணப்படும் தர்பூசணி

By

Published : Apr 18, 2020, 11:55 AM IST

Updated : May 27, 2020, 4:21 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த வெளுங்கனந்தல் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் அளவில் தர்பூசணி 30 ஆண்டுகளாகப் பயிரிட்டுவருகின்றனர்.

ஆண்டுதோறும் கோடை வெயில் தொடங்கிய நிலையில் ஏப்ரல், மே மாதம் விற்பனை அதிகரிக்கும் என்பதால், அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெறும்.

இந்நிலையில், இந்தாண்டு அறுவடை பணியின்போது கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்விதமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் விவசாயிகள் தர்பூசணியை அறுவடை செய்யாததால், அது நிலத்திலேயே அழுகிய நிலையில் காணப்படுகிறது.

அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அழுகும் தர்பூசணி

ஆண்டுதோறும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்துவந்த தர்பூசணி தற்போது, 144 தடை உத்தரவால் வாகனங்கள் இயக்கத் தடைசெய்யப்பட்ட நிலையில், தற்போது அறுவடைசெய்யப்படாமல் நிலத்தில் உள்ளது.

எனவே, அரசு விற்பனைக்கு அனுமதிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசால் முடிந்த இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க:சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து விலகி இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

Last Updated : May 27, 2020, 4:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details