தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 124 பேருக்கு கரோனா - கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

திருவண்ணாமலை: மாவட்டத்தில் இன்று (ஜூலை.15) ஒரே நாளில் மட்டும் 124 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Jul 15, 2020, 5:39 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ( ஜூலை. 14) வரை கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 223 ஆக இருந்தது. இன்று ( ஜூலை 15) புதிதாக 124 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 347 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று( ஜூலை 14) வரை கரோனா நோய்த் தொற்றால் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1, 864 ஆக உள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையிலிருந்து வந்த 3 பேர், காஞ்சிபுரத்தில் இருந்து வந்த இரண்டு பேர், பெங்களூர், பாண்டிச்சேரி மற்றும் விழுப்புரத்தில் இருந்து வந்த தலா ஒருவர் , நோயாளியுடன் தொடர்பில் இருந்த 31 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 16 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 57 பேர், முன் களப்பணியாளர் ஒருவர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 11 பேர் உள்ளிட்ட 124 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details