தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் ஒரேநாளில் 146 பேருக்கு கரோனா - திருவண்ணாமலையில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

திருவண்ணாமலை: மாவட்டத்தில் இன்று (ஜூலை 17) ஒரே நாளில் மட்டும் 146 பேருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செயப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

By

Published : Jul 17, 2020, 6:05 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ( ஜூலை 16) வரை கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 559 ஆக இருந்தது. இன்று ( ஜூலை 17) புதிதாக 146 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று( ஜூலை 16) வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2087 ஆக உள்ளது. சிகிச்சை பலனின்றி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையிலிருந்து வந்த 4 பேர், திருப்பூரிலிருந்து வந்த ஒருவர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 33 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 27 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 68 பேர், முன் களப்பணியாளர்கள் 4 பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 9 பேர் உள்ளிட்ட 146 பேருக்கு இன்று மட்டும் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details