தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிதி - 5ஆம் வகுப்பு மாணவன் ரூ.1860 உதவி - Thiruvannamalai District Collector's Fund by child

திருவண்ணாமலை: கரோனா பாதிப்பு நிவாரண தொகையாக தனது சேமிப்பான 1860 ரூபாய்யை 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் வழங்கினான்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் உதவி
ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் உதவி

By

Published : Apr 23, 2020, 8:14 PM IST

திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது மகன் ராஜேஷ், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பலரும் பிரதமர், முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கரோனா நிதி வழங்கி வருகின்றனர்.

பலர் அரிசி, மளிகை பொருள்கள், காய்கறிகள், உணவு ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். அதேபோல், மாணவன் ராஜேஷ் தனது உண்டியலில் சேர்ந்து வைத்துள்ள 1860 ரூபாய் சோமிப்பை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் வழங்கினார். அந்த மாணவனை பாராட்டி கைகுலுக்கிய ஆட்சியர் அந்த மாணவனுக்கு சான்றிதழ் வழங்கினார்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் உதவி

இதேபோல், கொரால்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்ற விவசாயி கரோனா பாதிப்பில் உள்ள பொது மக்களுக்கு உதவும் வகையில் 60 மூட்டை அரிசியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார். இதைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் விவசாயியை பாராட்டினார்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை சிறுமியின் மனிதநேயம் - சேமிப்பு பணம் மூலம் மாற்றுத்திறனாளிக்கு உதவி

ABOUT THE AUTHOR

...view details