தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டுகிறது. குறிப்பாக சென்னையில் அதிகரிக்க தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,909ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 176 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.