திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்ற கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு அலுவலர்கள், முன் களப்பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
அவர்களின் மன அழுத்தத்தை போக்கும்வகையில், நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து, நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி ஆகியோரின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தியதிலிருந்து கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள் என பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள், முன் களப்பணியாளர்கள் தங்களது பணியினை இரவு பகல் பாராமல் செய்துவருகின்றனர்.
இவர்களின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்றது.