திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயில் அருகே குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால் குரங்குகளை மயக்க மருந்து வைத்து பிடிப்பதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் தேங்காயில் விஷத்தன்மையுள்ள மயக்க மருந்து தடவி குரங்குகளை பிடிப்பதற்காக கோயிலுக்கு அருகாமையில் வைத்துள்ளனர்.
இந்த மயக்க மருந்து தடவப்பட்ட தேங்காய்களை கோயிலுக்கு அருகாமையில் உள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு சிறுவர், சிறுமிகள் எடுத்து சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்களை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.