திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு எதிரில், ஸ்ரீ பர்னிச்சர் கடையை நடத்திவந்தவர் ஜெகன் (25). இவர் நேற்று முன்தினம், போளூரிலிருந்து ஆரணியில் ராட்டினமங்கலம் சாலையில் உள்ள தனது உறவினர் அனந்த சயனத்தை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். பள்ளிப்பட்டு சேவூர் புறவழிச்சாலை அருகே செல்லும்போது, எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
வேலூர் தனியார் மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் அவர் அனுமதிக்கப்பட்டார்.